பெரம்பலூர் அருகே கோனேரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(34). இவரது மனைவி சுகந்தி(27). இவர்களுக்கு 5, 3 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுகந்தி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் பெரியசாமி தனது மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அன்றைய தினமே நள்ளிரவு நேரத்தில் சுகந்தி, அவரது தந்தை சுந்தரராஜ், சகோதரர் சுரேஷ்(25) ஆகியோருடன் கணவர் வீட்டுக்கு சென்று அவரை இரும்பு கம்பி உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெரியசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுகந்தி, சுந்தர்ராஜ், சுரேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.