தமிழக பாஜக மகளிர் அணியின் சார்பில் இன்று மதுரையில் நீதிப் பேரணி தொடங்கும் என்று அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில் அதற்காக பெண்கள் திரண்டு வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தினார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகை குஷ்பு உட்பட பாஜக பெண்கள் கையில் சிலம்பு ஏத்தி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக கூறி தற்போது நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைதான பாஜகவினர் ஆடுகள் அடைக்கப்படும் வளாகத்தில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண்கள் அண்ணா பல்கலைக்கழகம் மாணவிக்கு நீதி வேண்டி போராட வந்தோம். நாங்க என்ன ஆடு மாடுகளா? எங்கள இங்கே கொண்டு வந்து அடைச்சு வச்சிருக்காங்க. எந்த அக்கிரமமும் நடந்தாலும் நாங்க கேட்க கூடாதா? என கேள்வி எழுப்பினர்.