
பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்திய ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் ரயில்வே போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போராட்டம் குறித்து 12 லட்சம் ரயில்வே ஊழியர்களிடம் தொழிற்சங்கங்கள் வருகின்ற நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ரகசிய வாக்கு எடுப்பு நடத்த உள்ளன. இந்தப் போராட்டம் உறுதியானால் ரயில் மூலம் வெளியூர் செல்ல திட்டமிட்ட பயணிகள் கடும் பாதிப்படைவார்கள்.