
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மல்யுத்த வீரர்கள் சென்ற ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்ற புது கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். இதை காவல்துறையினர் தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இக்கட்டான சூழ்நிலையில் வேறு வழியின்றி காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இனி மல்யுத்த வீரர்களுக்கு ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது என்று டெல்லி காவல்துறையினர் நேற்று தெரிவித்தனர். இந்த நிலையில் போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப் போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்து உள்ளனர். ஹரித்வாருக்கு பேரணியாக சென்று மாலை 6 மணிக்கு நதியில் பதக்கங்களை வீசுவோம் என கூறி இருக்கின்றனர்.