விழுப்புரம் மாவட்டம் அருகே சாலமேடு என் ஜி ஜி ஓ காலனி சேர்ந்த மங்கள்ராஜ் என்பவருடைய மகன் கார்த்திகேயன். இவர் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே கார்த்திகேயனின் வீடு அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் அப்போது தனது மகனிடம் கும்பாபிஷேக நீர் வாங்கி வருமாறு தந்தை கூறியுள்ளார். ஆனால் கார்த்திகேயன் செல்ல மறுத்ததால் அவரை தந்தை திட்டி உள்ளார்.

இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது வீட்டில் உள்ள இரும்பு குழாயில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி கார்த்திகேயனின் தாய் விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.