உலக முதலீட்டாளர்கள் மாநாடு எதிரொலியாக, முதலீடு செய்த நிறுவனங்களுக்கு ஏற்ப “நான் முதல்வன்” திட்டத்தில் இனி மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்களில் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில், எந்தெந்த துறையில் அதிக முதலீடுகள் வந்தனவோ, அதற்கு ஏற்றாற்போல பயிற்சி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.