நாயை நாய் என்று கூறாமல் குழந்தை என்கிறீர்கள். ஆனால் அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா? என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் அவர் நாய்களை வளர்ப்பவர்கள் அதற்கு முறையாக லைசன்ஸ் வாங்குவது கிடையாது.

பாதுகாப்பற்ற முறையில் செல்ல பிராணிகளை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது என்பதை தெரிவித்தும் அதன் உரிமையாளர்கள் பின்பற்றுவது கிடையாது. செல்லப்பிராணிகளை வெளியே அழைத்துச் செல்லும்போது கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.