
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் சூழலில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. காய்கள் மற்றும் பழங்களை கழுவி சாப்பிடவும், குகை, கிணறுகள் மற்றும் இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல், தலைவலி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏதாவது இருந்தால் 21 நாள் தனிமையில் இருக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வவ்வால் மூலம் நிபா வைரஸ் பரவுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் காய்ச்சல், தலைவலி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் உடன் வரும் நோயாளிகளை உடனடியாக பரிசோதித்து முடிவுகளை தெரிவிக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து நோயாளிகளை கையாள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.