
தமிழகத்தில் பனை சாகுபடி ஊக்குவிப்பதற்காக நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களில் 12 லட்சம் பனை விதைகளை நடவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீலகிரியை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 12 லட்சம் பனை விதைகளும் 7500 பனங்கன்றுகளும் நடவு செய்யப்பட உள்ளன. எனவே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் தோட்டக்கலைத் துறையில் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.