மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஓம்கார் நகர் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பள்ளி முடிந்து மாணவி ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பிய நிலையில் ஆட்டோவை அந்த டிரைவர் ஒதுக்குப்புறமாக நிறுத்தி வைத்துள்ளார்.

அதன்பிறகு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின்  அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் கடந்த 4 மாதத்திற்கு முன்பாக இதே போன்று 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியை நீதிமன்றத்தில் எழுத்தாளராக பணிபுரியும் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.