பொதுவாக சில விஷயங்கள் உண்மையா இல்லையா என்று பலருக்கும் குழப்பம் இருக்கும். அதில் ஒன்றுதான் பாம்புகள் பழிவாங்கும் என்ற கருத்தும். இந்த விஷயத்தில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பாம்புகள் பழிவாங்கும் தன்மை கொண்டவை என பலரும் கூறுவார்கள். அறிவியலின் அடிப்படையில் பாம்புகள் யாரையும் பழிவாங்குவதும் இல்லை வேண்டுமென்று தீண்டுவதும் இல்லை. உண்மையில் பாம்புகள் மிகவும் சாதுவானவை.

மனிதர்களைக் கண்டு பயந்து ஒதுங்கிப் போகவே அவை விரும்பும். பாதையை மறைப்பது அதனை தாக்குவது போன்ற செயல்களில் பாதுகாத்துக் கொள்வதற்காகவே பாம்பு சில நேரங்களில் மனிதர்களை கடிக்கிறது. தனது துணையை யாராவது கொன்று விட்டால் மற்றொரு பாம்பு பழிவாங்க வரும் என்று முன்னோர்கள் காலத்தில் இருந்தே நிலவி வருகின்றது. தன்னுடைய ஜோடி பாம்பு கொல்லப்பட்ட இடத்தில் மற்றொரு ஜோடி பாம்பு சுற்றிக் கொண்டே இருக்கும். இது பழி வாங்குவதற்காக வந்திருக்கிறது என கூறினால் உண்மையில் பாம்புகளின் பிறப்பு உறுப்புகளுக்கு அருகில் இருக்கும் சுரப்பி அவற்றை கொல்லும் போது பலமுறை வெடிக்கிறது. அப்போது அற்புதமான வாசனை ஒன்றை வெளியாகிறது.

இந்த குறித்த வாசனையை மற்ற பாம்புகளை ஈர்க்கும் தன்மை கொண்டது. அதனால்தான் ஒரு பாம்பு இறந்த பிறகு பெண் பாம்புகள் அந்த இடத்தில் அடிக்கடி உலா வருகின்றன. இந்த சுரப்பியில் இருந்து வெளிப்படும் வாசனை பெண் பாம்புகளை அதிகமாக பாதிக்கும். ஆனால் அதை கொன்றவரை பழி வாங்குவதற்காக மற்ற பாம்பு வந்திருப்பதாக கூறுவார்கள். அது மட்டுமல்லாமல் பாம்புகளால் எதையும் நீண்ட நேரம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது பாம்புகளுக்கு நினைவாற்றல் மிகவும் குறைவாக இருக்கும். எனவே பாம்புகள் பழிவாங்கும் என்பது அறிவியல் ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதையாக உள்ளது. அது எந்த வித உண்மையும் ஆதாரமும் கிடையாது.