
ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள நபர்களுக்கு பி எப் அட்வான்ஸ் இனி மூன்று நாளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி எப் தொகையிலிருந்து அட்வான்ஸ் பெறுவது, தானியங்கி நடைமுறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக விண்ணப்பித்த மூன்று நாட்களில் பணம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும். பிறகு குறைந்தபட்சம் 14 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருந்த நிலையில் தற்போது கால அளவும் குறைக்கப்பட்டுள்ளது.