
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. அதேசமயம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்ட நிலையில் இதன் காரணமாகவும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி கடந்த ஒரு வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்க உள்ளது. 2021 மே மாதம் முதல் இதுவரை 15,79,393 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் குடும்ப அட்டை மாற்றம் மற்றும் புதிய அட்டைக்காக பொதுமக்கள் அலைய வேண்டியதை குறைக்கும் வகையில் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.