தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்ததால் பெண்கள் புதிய குடும்ப அட்டை பெற அதிக அளவில் விண்ணப்பித்து வருகின்றனர்.

குறிப்பாக ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசிப்பவர்கள் தனித்தனியாக ரேஷன் காரனுக்கு விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் ஆனால் அவர்களை ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்தில் சேர்க்கக்கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.