மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தபடி, புதிய வரி விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியான நிலையில், மத்திய நிதியமைச்சகம் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஏப்.1 முதல் எவ்வித புதிய வரி நடைமுறையும் அமலுக்கு வரவில்லை என விளக்கமளித்த நிதியமைச்சகம், வரி செலுத்துவோர் தங்களுக்கு எது நன்மை பயக்கும் என்று நினைக்கிறார்களோ அந்த வரி முறையை (Old or New) தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.