![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/06/ec1e1c52-ec7b-466b-a9ef-ff0578dc62df.-.jpeg)
நைஜீரியா நாட்டின் போர்னோ மாகாணத்தில் திருமண விழா, இறுதி ஊர்வலம், மருத்துவமனைகள் ஆகியவற்றை குறிவைத்து நடந்த தற்கொலை தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
முதற்கட்ட விசாரணையில், தற்கொலை படையை சேர்ந்த பெண்கள் உடலில் குண்டுகளை கட்டிக் கொண்டு பொதுமக்கள் கூட்டத்துக்குள் புகுந்து வெடிக்க செய்ததாக கூறப்படுகிறது. எனினும், இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.