கோவை மாவட்டம் காரமடையில் வாயில் காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்ட பெண் யானை ஒன்று நேற்று முன்தினம் உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று வெளியான உடற்கூறாய்வு முடிவில் வெடிமருந்தை யானை கடித்த போது அதனுடைய தாடை, பற்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது.

இதனால் உணவு உட்கொள்ள முடியாமல் உடல் பலவீனமாகி யானை உயிரிழந்தது தெரியவந்துள்ளது. எனவே வெடி மருந்தால் பெண் யானையின் வாயில் ஏற்பட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என்று உடற்கூறாய்வில் தகவல் வெளியாகி உள்ளது.