மத்திய பிரதேசத்தின் குவாலியரை சேர்ந்த கல்லூரி மாணவரான பிரமோத் குமார் தண்டோடியாவுக்கு ரூ.42 கோடி வங்கி பரிவர்த்தனைக்கு வரி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மும்பை மற்றும் டெல்லியில் இயங்கும் நிறுவனம், தனது பான் எண்ணை தவறாக பயன்படுத்தி வருகிறது. இது எப்படி சாத்தியம் என்பது எனக்கு தெரியவில்லையென பிரமோத் குமார் தண்டோடியா வேதனை தெரிவித்துள்ளார்.