ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் கோவில் திருவிழா நடைபெற்றது. கடந்த 10-ஆம் தேதி கோவில் திருவிழாவை முன்னிட்டு தீ மிதிக்கும் போது கேசவன்(56) என்பவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேசவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கேசவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.