தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. இதனை முன்னிட்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்பட இருக்கிறது. அதன் பிறகு ஒவ்வொரு முறையும் ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் நிலையில் இந்த வருஷம் நிதிப் பற்றாக்குறை காரணமாக அரசு வழங்கப்பட மாட்டாது என்று கூறிவிட்டது. இதன் காரணமாக மகளிர் உரிமை தொகையை முன்கூட்டியே வரவு வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது.

இதனை அரசு ஏற்று பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே மகளிர் உரிமைத்தொகை பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறியது. அதன்படி நாளை மறுநாள் அதாவது ஜனவரி 10ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில் இந்த மாதம் ஜனவரி 10ஆம் தேதி அதாவது வருகிற வெள்ளிக்கிழமை வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.