தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் போத்தி நாராயணன். இவரது 18 வயது மகள் தூத்துக்குடியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் போத்தி நாராயணன் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என போத்தி நாராயணன் தனது மகளை மிரட்டியுள்ளார்.

ஒரு கட்டத்தில் தந்தையின் தொந்தரவு எல்லை மீறியதால் கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போத்தி நாராயணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.