திருவள்ளூர் மாவட்டம் கண்ணபாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சரிதா. இவருக்கு திருமணமாகி 8 வயது மகள் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சரிதா தனது கணவரை பிரிந்து விட்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு சரிதா மேம்பாகம் பகுதியைச் சேர்ந்த மதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மதன்-சரிதா தம்பதிக்கு மேடினா என்ற பெண் குழந்தை பிறந்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மதன் இரும்பு குழாயால் சரிதாவை அடித்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மதனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திருவள்ளூர் மாவட்டம் மகளிர் விரைவு நீதிமன்றம் மதனுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது .