
உலக மகளிர் தினமானதும் வரும் எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் மகளிருக்கான ஸ்பெஷல் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்யும் மகளிர் தின டூர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மகளிர்க்காக மார்ச் எட்டாம் தேதி ஸ்பெஷல் டூர் ஒன்றை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மார்ச் எட்டாம் தேதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த டூர் ஒரு நாளில் முடிவடையும்.
இந்த ட்ரிப்பில் சென்னை மகாபலிபுரம், முதலியார் குப்பம் உள்ளிட்ட இடங்கள் சுற்றி காண்பிக்கப்படும். இதற்கு இடையே பெண்களுக்கான சில விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படும். குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மகளிர்க்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை வேளையில் தேநீர் வழங்கப்படும். பஸ் சார்ஜ் பயண செலவு என மொத்தம் சேர்த்து பெண்கள் ரூ.3,150 வழங்க வேண்டும். www.ttdconline.com என்ற இணையதளத்தில் இந்த டூருக்கு பெண்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.