தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதேபோன்று திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் தமிழகத்தில் இன்று இரவு 10:00 மணி வரை மொத்தமாக 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.