திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (JRF) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: மொத்தம் 6 பணியிடங்கள் உள்ளன.
தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், சிவில் பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்இ அல்லது எம்.டெக் படிப்புகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீர்வள பொறியியல், ஹைட்ராலிக் பொறியியல், ஹைட்ரோ இன்ஃபர்மேடிக்ஸ், வேளாண் பொறியியல், ரிமோட் சென்சிங், புவித் தகவலியல் போன்ற தொடர்புடைய துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். கேட் (GATE) தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். புவிசார் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நீர்நிலை மாடலிங் துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதத்திற்கு ரூ.37,000 முதல் ரூ.42,000 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் www.nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
Dr. Nisha Radhakrishnan, Associate Professor, Department of Civil Engineering, National Institute of Technology, Tiruchirappalli – 620 015.

கடைசி தேதி: பூர்த்தியடைந்த விண்ணப்பங்கள் 12.05.2025 தேதிக்குள் சென்று சேர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.