வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ள நிலையில் தமிழகத்திற்கு இன்று ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் மழை அதிகமாக இருக்கும் பகுதிகளில் தயார் நிலையில் இருக்கிறார்கள். அதன்பிறகு நாளை பிற்பகல் கடலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள் யாரும் 90 கிமீ வேகத்திற்கு  பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மயிலாடுதுறை  மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு புயல் காரணமாக சென்னையில் பூங்காக்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று ஐ டி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது  சென்னையில் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் பொது போக்குவரத்து பிற்பகலில் நிறுத்தப்படும். ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

மேலும் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 90 km வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.