
கேரள மாநிலத்தில் லூசியஸ் ஜெர்மியஸ் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி இருக்கும் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த லூசியஸ் தன்னுடைய மனைவி மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதன் காரணமாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கடந்த 2023 ஆம் ஆண்டு போலீஸ் வழக்குப்பதிவு செய்த நிலையில் மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் லூசியஸ் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.