
மும்பை நகரில் மராட்டி பேசும் மக்களுக்கும் பிற மொழியாசிரியர்களுக்கும் இடையே கலாசார வேறுபாடு அடிப்படையிலான மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் இந்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது. அங்கு ஜெயின், மார்வாரி, குஜராத்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற நிலையில், உள்ள மாத்ரபாஷை மராட்டி குடும்பங்கள் நான்கு மட்டுமே. அவர்கள் மீதான தொந்தரவு நாள்தோறும் தொடர்ந்துவருவதாகவும், மீன் மற்றும் இறைச்சி உணவுகளுக்காக ‘அழுக்கு மக்கள்’ என இழிவாக பேசி அவமதிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
VIDEO: घाटकोपरमध्ये पुन्हा मराठी विरुद्ध अमराठी वाद, मराठी कुटुंबाला अपमानास्पद वागणूक दिल्याचा प्रकार, मनसैनिकांनी विचारला जाब pic.twitter.com/sjQL0B6u6v
— Lokmat Mumbai (@LokmatMumbai) April 17, 2025
இந்த செய்தியை அறிந்ததும் மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா (MNS) கட்சி தோன்றிய இடத்திற்கு விரைந்து சென்று மராட்டி குடும்பங்களுக்கு ஆதரவாக களமிறங்கினர். தொடர்ந்து மராட்டி மொழி மற்றும் மரபுகளை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தியும், வங்கி உள்ளிட்ட நிறுவனங்களில் மராட்டி மொழியை கட்டாயமாக்க வேண்டும் எனவும் மத்தியிலும் மாநிலத்திலும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் மராட்டி பேசாத வங்கி ஊழியர்களிடம் எச்சரிக்கை விடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.