நாடாளுமன்றத்தில் பேச பணம் வாங்கியதாக ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி எம்.பி பதவியை இழந்த திரிணாமூல் காங்கிரஸ், நிர்வாகி மஹுவா மொய்த்ராவின் அரசு பங்களாவை காலி செய்ய மத்திய அரசு அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற வீட்டுவசதி குழு எழுதிய கடிதத்தில், எம்.பி என்ற முறையில் அவருக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவை உடனே காலி செய்ய அறிவுறுத்துமாறு கூறப்பட்டுள்ளது.