
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி பாலிசியை எடுக்கலாம். 30 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இதில் சேர்ந்து பயனடையலாம். பாலிசிதாரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் தேவையில்லை.
இந்த திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் செலுத்தி பத்து ஆண்டுகள் ஒத்திவைப்பு காலத்தை தேர்வு செய்தால் 11ம் ஆண்டு முதல் மாதம் தோறும் பத்தாயிரம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். பாலிசிதாரர் உயிரிழந்தாலும் செலுத்தப்பட்ட தொகை நாமினிக்கு கிடைக்கும். இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை அறிய https://licindia.in/hi/jeevan-shanti என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.