
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாநடிகர் விஜய்க்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் பின்னர் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவருக்கு விஜய் தேர்தல் பொறுப்பாளர் பதவி வழங்கியுள்ளார். அதன் பிறகு திமுக மற்றும் பாஜகவை ஆதவ் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பொது குழு கூட்டத்தின் போது பல பொய் பிரச்சாரங்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை என விமர்சித்ததோடு ஆடு எனவும் கூறினார்.
அதன் பிறகு பிரதமர் மோடி டெல்லியில் அமர்ந்து கொண்டு மற்ற மாநிலங்களை கண்ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார் என்றும் முகவுக்கு ஆதரவாக அண்ணாமலை செயல்படுவதாகவும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில் இதற்கு தற்போது ஆதவ் மைத்துனர் லாட்டரி கிங் மார்டின் மகன் தான் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கண்டனம் தெரிவித்துள்ளார். இவருடைய தங்கையை தான் ஆதவ்அர்ஜுனா திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் தமிழக பாஜக தலைவர் திரு.கே. அண்ணாமலைக்கு எதிராக அர்ஜுன் எதிராக வெளியிட்ட ஆதாரமற்ற கருத்துக்கு எனது ஆட்சேபனையையும் மன்னிப்பும் தெரிவித்துக் கொள்கிறேன். பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி வைத்துக்கொண்டு, தனது அரசியல் மற்றும் நிதி பேராசையை பூர்த்தி செய்ய, “அவர் தனது மாமனார் பணத்தை, அதாவது என் தந்தையின் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார், எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கிறார், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகிறார்” என்ற அவரது கூற்றையும் நான் ஆதரிக்கிறேன். அவரது முட்டாள்தனத்துக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், அவரது செயலால் மேலும் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால், நீதிமன்றத்தை அணுகி எனது நற்பெயரைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்பதையும் தெளிவுபடுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன் என்று கூறிள்ளார்.