தமிழ்நாட்டில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் அதிமுக கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் நடுத்திய போராட்டம் குறித்து பேட்டியளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிசாமி உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்க மறுத்த உதய் மின் திட்ட ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி ஏன் கையெழுத்திட்டார். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் அதிமுகவின் செயல் உள்ளது என கூறியுள்ளார்.