
நாமக்கல் மாவட்டத்தில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி (20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். இதற்காக அவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளார். இவர் தன்னுடைய உறவினரான வினோத் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இதில் வினோத் கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக இறந்தார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த விஜயலட்சுமி கடந்த 21ஆம் தேதி விஷம் குடித்த தற்கொலைக்கு முயன்றார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.