சென்னை அருகே கடந்த 14ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இது நேற்று சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில் தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் மழையின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் தற்போது மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி வருகிற 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதனால் கேரளா, லட்சத்தீவு, மாஹே ஆகிய இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு கர்நாடகாவில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கடலோர ஆந்திர பகுதி, ராயலசீமா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் லேசான மலைக்கும் வாய்ப்பு உள்ளது.