தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. நேற்று கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிவகார்த்திகேயன் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, அதிக நேரம் சமூக வலைதளத்தை பயன்படுத்தாதீர்கள்.

குறிப்பாக எக்ஸ் தளத்தை. இது என் அன்பான ஆலோசனை. இதனால் எலான் மஸ்க் என் கணக்கை மூடக்கலாம். அப்படி நடந்தால் அதுவே என் முதல் வெற்றியாக இருக்கும். எக்ஸ் தளத்திலிருந்து வெளியே வந்தால் எந்த பாரமும் இல்லாத சுதந்திரமான மனநிலையை உணர்வீர்கள். கடந்த இரண்டு வருடங்களாக இணையத்திற்கு குறைந்த நேரமே நான் செலவிடுகிறேன். அது உண்மையில் எனக்கு உதவியாக இருந்துள்ளது என கூறியுள்ளார்.