மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், பல முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அவற்றின் கணிப்புகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியானது  மூன்றாவது முறையாக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறுகின்றன. இந்நிலையில் கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் I.N.D.I.A கூட்டணி மெகா வெற்றி பெறும் என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார்.

மீறி, மோடி மீண்டும் பிரதமரானால் “நான் மொட்டையடித்துக் கொள்கிறேன்” என்றும் அவர் சவால் விட்டுள்ளார். அனைத்து செய்தி நிறுவனங்களும் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்திருக்கும் நிலையில் சோம்நாத் பாரதி இவ்வாறு பேசியிருக்கிறார்.