சென்னை எழும்பூர் ரயில்வே கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வேகமாக செயல்பட்டு ரயில்வே கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்  தீ விபத்து ஏற்பட்டதால் சிக்னல் கோளாறு ஏற்பட்ட ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை-எழும்பூர் கடற்கரை மார்க்கத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் அதனை சீரமைக்கும் பணியில் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.