இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்த நிலையில் தனிப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி தனிநபர் ஒருவர் ரத்த உறவுகள் அல்லது குடும்ப பெயரை கொண்டவர்களுக்கு மட்டுமே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியும்.

நண்பர்கள் அல்லது பிறருக்காக முன்பதிவு செய்தால் ஜெயில் தண்டனையுடன் அபராதமும் கிடைக்கும் என்று புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ரயில்வே விதிகளின் படி மூன்றாம் நபர்களுக்கு முன்பதிவு செய்ய அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்த விதியை மீறினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது