இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக வேலையில்லாத இளைஞர்களுக்காக அரசு கடன் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி பெண்கள், எஸ்சி எஸ்டி வேலையில்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிக்க ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இதன் மூலமாக பத்து லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும். இந்த கடன் தொகை ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் தகுதியானவர்கள் https://www.standupmitra.in/ என்ற இணையதளம் மூலம் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.