சென்னையில் ஆதம்பாக்கம் என்ற பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேஸ்புக் பக்கத்தை பார்த்தபோது அதில், 500 ரூபாய் மந்திர நோட்டை தொட்டால் 5000 ரூபாய் கேஷ் பேக் பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது. அவரும் ஆசையில் பதிவை கிளிக் செய்த போது உங்களுடைய வங்கி கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் வந்துள்ளதாக குறுந்தகவல் அவருக்கு வந்துள்ளது.

வங்கி கணக்கு இருப்பை வினோத் சரிபார்த்த போது 4650 ரூபாய் மொத்தமாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துடன் லிங்கை அனுப்பி இந்த மோசடி நடைபெற்றுள்ள நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது போன்ற செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.