திருச்சி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த பேருந்து நேற்று இரவு சிறுகனூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது. இதனால் அரசு பேருந்து முற்றிலும் சேதம் அடைந்தது.

இந்நிலையில் இதில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சேதமடைந்த அந்த வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.