
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை ராமாபுரத்தில் பெண் இன்ஜினியர் உட்பட 3 பேரிடம் நூதன முறையில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
மின்வாரியத்தில் இருந்து பேசுவதாகவும் கிரெடிட் கார்டுக்கு ரிவார்டு கிடைத்து இருப்பதாகவும், வேலைவாய்ப்பு இருப்பதாகவும் கூறி மூன்று பேர் செல்போனுக்கு லிங்க் ஒன்றை மர்ம நபர்கள் அனுப்பி உள்ளனர். அந்த லிங்கை சம்பந்தப்பட்ட நபர்கள் கிளிக் செய்ததும் அவர்கள் அக்கவுண்டில் இருந்து பணத்தை திருடியுள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.