
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒருநாள் மிக அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வருகிற 16-ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வருகிற 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.