
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த பயணி ஒருவர் ஷோரனூர் ரயில் நிலையத்தில் உள்ள கடையில் வடையுடன் சட்னி வாங்கி உள்ளார். அந்த வடையை வாங்கி பார்த்த போது அதில் இறந்த நிலையில் கிடந்த தவளையை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் புகார் அளித்த நிலையில் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பிறகு ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ரயில் நிலையத்தில் வடைக்கு வழங்கிய சட்னியில் தவளை இறந்து கிடந்த சம்பவத்தால் பயணிகளும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.