கடலூர் மாவட்டம் கிள்ளை காவல் நிலையத்தில் உதயகுமார்(63) என்பவர் கடந்த 2013-ஆம் ஆண்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தார். இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஹமீது என்பவரது வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது காவல் நிலையத்தில் இருந்து அந்த வாகனத்தை விடுவிக்க உதயகுமார் 2500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து ஹமீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் உதயகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி உதயகுமாருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.