தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை. சொத்து வரி, மின்சாரக் கட்டணம் உயர்வு என மக்களுக்கு துன்பத்தை மட்டுமே திமுக அரசு வழங்கியிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.