![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/06/6734ae5c-1508648f-fraud_850x460_acf_cropped.jpg)
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் ராகேஷ். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இவருடைய வாட்ஸ் அப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் ராகேஷ் இளம்பெண் ஒருவரோடு நெருக்கமாக இருப்பது போன்று ஆபாசமாக போலியாக சித்தரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராகேஷின் வாட்ஸ் அப் எண்ணில் சிறிது நேரத்தில் மர்மநபர் ஒருவர் பேசியுள்ளார். அந்த நபர் ராகேஷின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாகும் அவ்வாறு வெளியிடாமல் இருப்பதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் பயந்து போன ராகேஷ் அந்த நபரின் வங்கி கணக்கிற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வருகிறார்கள்.