
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைந்தது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் எல்லைப் பகுதிகளில் உள்ள மது கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மன்னாடிபட்டு கொம்யூன் பகுதிக்கு உட்பட்ட மது கடைகளை ஜூலை 8, 9, 10 ஆகிய தேதிகளில் மூட புதுச்சேரி கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை 8 முதல் ஜூலை 10 வரை மது கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.