
ஆந்திர மாநிலத்தில் சிவ பிரசாத்(36)- ஜான்சி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சிவ பிரசாத் வேலை காரணமாக திருப்பத்தூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்.
அப்போது அவர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி தனது மனைவியை அடித்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தன்னுடைய வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்தார். இதனைக் கண்ட அவரது மனைவி ஜான்சி சரியான நேரம் பார்த்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சிவ பிரசாத் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.