ஈரோடு மாவட்டம் பெரியவலசு பகுதியில் சொர்ணா (80) என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் ஒன்று மோதியது. இதில் மூதாட்டிக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரை அவருடைய மகள் வளர்மதி மீட்டு ஆட்டோவில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மூதாட்டியை அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். அப்போது ஸ்ட்ரெச்சர் தராமல் அவர்களை அலைக்களித்ததாக கூறப்படுகிறது. இதனால் மூதாட்டி அவருடைய மகள்  தூக்கி சென்றார். இதை அங்கிருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். இருப்பினும் யாருமே அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.